Map of Tamilnadu

Friday, October 8, 2010

வாக்கியங்களை முடித்து எழுதுக. ( ~ Exercises for Pri HTL and Sec School Tamil ~ )

1 . மீனவர்கள் தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி அதிகமான
மீன்களைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.

தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி _________________.


2 . ஆசிரியர் தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழவேண்டும் என்றே விரும்பினார்.

தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் ______________.


3 . இன்றைய இளைய நடிகர்களின் விருப்பம் சிறார்கள் படித்து முன்னேற வரவேண்டும் என்பதே ஆகும்.

இன்றைய இளைய நடிகர்கள் _______________. 

~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+

1. அப்பாவுக்கு அம்மா சமைக்கும் பிரியாணியை உண்ண மிகவும் விருப்பம்.

அப்பா அம்மா சமைக்கும் பிரியாணியை ____________.


2. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மாணவர்கள் கருத்தூன்றிப் படித்தனர்.

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் _______________. 


3. சிறு பிள்ளைகள் கசப்பான மருந்தினை வெறுக்கிறார்கள்.

கசப்பான மருந்து ________________.

~+~+~+~+~+~+~+~+~+~


1. சிலந்தி பலமுறை முயற்சி செய்து வலையைப் பின்னி முடித்தது.

சிலந்தி வலையைப் பின்னி முடிக்க பலமுறை _______________.


2. முகுந்தன் தேர்வில் வெற்றி பெற்று தன் பெற்றோரை மகிவிக்க கடுமையாக உழைத்தான்.

முகுந்தன் கடுமையாக உழைக்கக் காரணம் _______________.


3. சரியான உணவு உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ______________.

~+~+~+~+~+~+~+~+~+~

1. கேள்விகளைச் சரியாகப் படிக்காததால் மாதவன் தவறான விடையை அளித்தான்.
மாதவன் தவறான விடையை அளித்ததற்கு ____________.
2. புதுச்சேரியில் பதற்றநிலை நிலவுவதற்கு முன்னால் அமைச்சர் கொலையுண்டதே காரணம் ஆகும்.
முன்னால் அமைச்சர் கொலையுண்டதால் _____________.
3. இராமானுஜம் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் தமிழர்களுக்கு தனி பெருமை.
தமிழர்களுக்கு தனி பெருமை கிடைக்க ______________.

No comments:

Post a Comment