Map of Tamilnadu

Tuesday, September 13, 2011

என் மாணவர்களின் கட்டுரைகள் - ராஜலக்ஷ்மி 6B 2011


 "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற பழமொழிக்கேற்ப நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்! இந்த பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், நான் ஒரு சம்பவத்திற்குப் பிறகுதான் புரிந்துகொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது!

"பந்தைத் தூக்கிப் போடு! " என்று நான் கத்தினேன். நானும் என் தம்பியும் விளையாட்டு மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். களைப்பாக இருந்ததால்வீட்டிற்குத் திரும்பினோம்.   வீட்டிருக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு என் பள்ளி வீட்டுப்பாடங்களைச் செய்தேன். உணவைச் சாப்பிட்டுவிட்டு என் படுக்கை அறையில் படுத்தேன். இதேமாதிரிதான் நான் தினமும் செய்துகொண்டிருந்தேன். என் நேரத்தை நான் இப்படித்தான் வீனாக்கிகொண்டிருந்தேன்!

அந்த வாரம் எனக்குத் தேர்வு வாரமாக இருந்தது. கணக்குத் தேர்வு. அந்தத் தேர்வில் எனக்கு ஒரு கேள்விகூட புரியவில்லை! அப்போதே, எனக்கு நன்றாக நான் செய்யமாட்டேன் என தெரிந்துவிட்டது! இந்தத் தகவலை என் பெற்றோரிடம் சொல்வதற்கும் பயமாக இருந்தது.

அடுத்த நாளே என் தேர்வின் முடிவுகளும், மதிப்பெண்களும் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. என்ன ஒரு கவலை! நான் நினைத்தபடியே நான் நன்றாகச் செய்யவில்லை. இதை நான் எப்படி என் பெற்றோரிடம் சொல்லப்போகிறேன் என்று நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

பெற்றோர் கையொப்பம் வாங்க நான் என் தேர்வுத்தாட்களை என் அப்பாவிடம் காட்டினேன். அவர் என் மதிப்பெண்களைப் பார்த்து கோபம் அடைந்தார்.என்ன ஆச்சரியம்! என் தந்தை என்னைத் திட்டவே இல்லை! அதற்க்கு மாறாக அவர் எனக்கு ஓர் அறிவுரை கூறினார்.

இந்த அறிவுரைதான் என்னை இப்போது ஒரு பெரிய மருத்துவராக மாற்றியதர்க்குக் காரணம் ஆகும். என் அப்பா, " நீ எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்கிறாய்! நேரம் அதிகமாக வீணாகிறது! நீ விளையாடும் நேரத்தில், வீட்டுப்பாடம் தவிர்த்து பொது தாட்களையும் மாதிரித் தேர்வுத்தாட்களையும் செய்து வன்திருந்தால், இந்தத் தேர்வில் நீ நன்றாகச் செய்திருப்பாய் அல்லவா?" என்று வினவினார். என் கண்களில் கண்ணீர் வரும் போல இருந்தது!

அப்போதுதான் நான் என் தவற்றை உணர்ந்துகொண்டேன். நான் இன்று முதல் நன்றாகப் படித்து என் பள்ளியில் முதல் மாணவராக வரவேண்டும் என உறுதிகொண்டேன். அன்று முதல் நான் நட்ராகப் படித்து, என் நேரத்தை வீணாக்காமல் நடந்துகொண்டேன். நான் உறுதி பூண்டதுபோலவே என் பள்ளியில் நான் தான் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனாகத் திகழ்ந்தேன்!  என் அப்பாவுக்குப் பெருமையாக இருந்தது! என் அப்பாவின் அறிவுரைப்படி நான் நடந்துகொண்டதால் நான் முன் கூறிய பழமொழிக்கேற்ப, இன்று நான் ஒரு சிறந்த மருத்துவராக இருக்கிறேன்.  

The portions in italics and in a different colour are the areas that I have had to meddle and correct the phrasing or the content! hope these help my P6 and all other P6 pupils who have their upcoming PSLE exams!!

Love,
Raihana Aasiriyar

No comments:

Post a Comment