Map of Tamilnadu

Wednesday, September 14, 2011

என் மாணவர்களின் கட்டுரைகள் - கௌதமன் 6A 2011

 "நன்றி மறவேல்" என்பது அவ்வையின் வாக்காகும். இந்த ஆட்டிசூடியை முன்பு மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று எண்ணியிருந்தேன்! ஆனால் அண்மையில் நடந்த சம்பவம் என் கருத்தை முழுதும் மாற்றியமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது! இந்த ஆத்திசூடியை நினைவு படுத்தும் வண்ணம் ஒரு சம்பவம் என் மனத்திரையில் அவ்வப்பொழுது நிழலாடும்...
நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். "சிலு சிலு"வென்று வீசும் காற்று என் முகத்தை முத்தமிட்டுச் செல்ல சூரிய வேந்தனின் செங்கதிர்கள் என் தொழில் பட்டு வியர்வு முத்துக்களை உருவாக்க, நான் மரங்களில் விரிந்திருந்த மலர்களின் மணத்தை உவகையுடன் சுவாசித்தேன்! " ஆ! அருமையான வாசனை!" என்று முணுமுணுத்துக்கொண்டே என் இல்லத்தை நோக்கி நடந்தேன். அப்போதுதான் அந்த உருவம் என் கண்களில் தென்பட்டது.
ஒரு நாய் தன் கண்களை மூடிக்கொண்டு பேச்சு மூச்சு இல்லாமல் சாலை ஓரமாக தரையில் பாவமாகக் கிடந்தது. " நாய்கள் இது போன்று உறங்காதே! வேறு பிரச்சனையினால்தான் இவாறு படுத்திருக்க வேண்டும்!" என்று நினைத்துக்கொண்டே நாயை நோக்கி நடந்து, அதனை உற்றுப் பார்த்தேன். அப்போதுதான் நாயின் தேகத்திலிருந்து குருதி கசிவதைக் கண்டேன். இரத்தம்!

நாய் என் வருகையை உணர்ந்துகொண்டு, தன் வாடிய முகத்தைத் திருப்பி என்னை உற்றுப் பார்த்தது. நானோ மனமிரங்கி 
அனலில் இட்ட புழுபோல் துடித்த நாயை என் வீட்டிற்கு தூக்கிச் சென்றேன். முதலில் நாய் சினங்கொண்ட சிங்கத்தின் சீற்றத்துடன் என்னைப் பார்த்துக் குறைக்க எண்ணியது; ஆனால், நான் அதை அன்புடன் தடவிக்கொடுத்து அதனை அமைதியாக்கினேன். பின் நான் என் வீட்டை நோக்கி நடந்தேன்!
 
வீட்டை அடைந்ததும் பையை என் மேசையில் வைத்தேன். நாயை அதன் அருகில் கிடத்தி அதன் காயத்தைப் பஞ்சால் சுத்தப்படுத்தினேன்; வழியைப் போக்கும் மருந்தை எடுத்து காயங்களின் மேல் பூசினேன். என் பெற்றோரிடம் கேட்டு அந்த நாயை என் செல்லப் பிராணியாக  வைத்துக்கொண்டேன். சில வாரங்களில் நாயும் பூரண குணமானது. அந்த நாய்க்கு நான் ஜிம்மி என்று பெயர் வைத்தேன்.
 
சில மாதங்களுக்குப் பிறகு, என் பெற்றோர் இருவரும் வெளியூர் செல்ல நேரிட்டிருந்தது. நானும் ஜிம்மியும் வீட்டில் தனியாக இருந்தோம். நள்ளிரவில் எனக்கு நல்ல தூக்கம். அப்போது என் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஜிம்மி கண்களைத் திறந்தது. அது கதவைத் திறந்தவனைப் பார்த்து என் காதுகளே வெடித்துவிடும்போல் குறைக்க ஆரம்பித்தது. நான் இரைச்சலைக் கேட்டுத் திடுக்கிட்டு கண் விழித்தேன். எங்கேயோ இருந்த வெளிச்சம் என் கண்களைக் கூசச் செய்தது. என்ன நடக்கிறது என்று பார்க்க நான் சந்தனமின்னலைப்போல பாய்ந்து வெளியே வந்தேன். அங்கே நான் கண்ட காட்சி என்னைச் சிலையாய் மாற்றியது. அங்கே ஓர் ஆடவன் அறையின் ஒரு மூலையில் பதுங்கி நின்றுகொண்டிருந்தான். ஜிம்மி தொடர்ந்து குறைத்துக்கொண்டேயிருந்தது. திடீரென்று அந்த ஆள் கதவை நோக்கிப் பாய நினைத்தபோது, ஜிம்மியும் பாய்ந்து அவன் காலைக் கடித்துக் குதறத் துவங்கியது! அந்த சமயத்தில் அவன் வழியால் தரையில் சாய்ந்தான். அப்போதும் ஜிம்மி அவனை விடுவதாக இல்லை. அதுதான் தக்க தருணம் என்று நினைத்து நான் காவலர்களுக்குத் தொலைபேசியின் வாயிலாக அழைத்தேன்.
 
காவலர்கள் வெகு விரைவில் வந்து சேர்ந்தார்கள். வீட்டினுள் புகுந்த கயவனைப் பிடித்துச்க் சென்றார்கள். அன்று நடந்த சம்பவம் சிலியில் செதுக்கிய எழுத்துப்போல என் மனதில் பதிந்துகொண்டது. எந்நேரமும் ஆத்திசூடியையும் அந்தச்சம்பவத்தையும் நினைவுகொள்ளும்போது என் வீட்டையும் என்னையும் காத்த என் நாய் ஜிம்மியை அழைத்து, அதனை அன்புடன் தடவிக் கொடுப்பேன்!
more follows...  look out for continuation..

Tuesday, September 13, 2011

என் மாணவர்களின் கட்டுரைகள் - ராஜலக்ஷ்மி 6B 2011


 "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற பழமொழிக்கேற்ப நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்! இந்த பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், நான் ஒரு சம்பவத்திற்குப் பிறகுதான் புரிந்துகொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது!

"பந்தைத் தூக்கிப் போடு! " என்று நான் கத்தினேன். நானும் என் தம்பியும் விளையாட்டு மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். களைப்பாக இருந்ததால்வீட்டிற்குத் திரும்பினோம்.   வீட்டிருக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு என் பள்ளி வீட்டுப்பாடங்களைச் செய்தேன். உணவைச் சாப்பிட்டுவிட்டு என் படுக்கை அறையில் படுத்தேன். இதேமாதிரிதான் நான் தினமும் செய்துகொண்டிருந்தேன். என் நேரத்தை நான் இப்படித்தான் வீனாக்கிகொண்டிருந்தேன்!

அந்த வாரம் எனக்குத் தேர்வு வாரமாக இருந்தது. கணக்குத் தேர்வு. அந்தத் தேர்வில் எனக்கு ஒரு கேள்விகூட புரியவில்லை! அப்போதே, எனக்கு நன்றாக நான் செய்யமாட்டேன் என தெரிந்துவிட்டது! இந்தத் தகவலை என் பெற்றோரிடம் சொல்வதற்கும் பயமாக இருந்தது.

அடுத்த நாளே என் தேர்வின் முடிவுகளும், மதிப்பெண்களும் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. என்ன ஒரு கவலை! நான் நினைத்தபடியே நான் நன்றாகச் செய்யவில்லை. இதை நான் எப்படி என் பெற்றோரிடம் சொல்லப்போகிறேன் என்று நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

பெற்றோர் கையொப்பம் வாங்க நான் என் தேர்வுத்தாட்களை என் அப்பாவிடம் காட்டினேன். அவர் என் மதிப்பெண்களைப் பார்த்து கோபம் அடைந்தார்.என்ன ஆச்சரியம்! என் தந்தை என்னைத் திட்டவே இல்லை! அதற்க்கு மாறாக அவர் எனக்கு ஓர் அறிவுரை கூறினார்.

இந்த அறிவுரைதான் என்னை இப்போது ஒரு பெரிய மருத்துவராக மாற்றியதர்க்குக் காரணம் ஆகும். என் அப்பா, " நீ எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்கிறாய்! நேரம் அதிகமாக வீணாகிறது! நீ விளையாடும் நேரத்தில், வீட்டுப்பாடம் தவிர்த்து பொது தாட்களையும் மாதிரித் தேர்வுத்தாட்களையும் செய்து வன்திருந்தால், இந்தத் தேர்வில் நீ நன்றாகச் செய்திருப்பாய் அல்லவா?" என்று வினவினார். என் கண்களில் கண்ணீர் வரும் போல இருந்தது!

அப்போதுதான் நான் என் தவற்றை உணர்ந்துகொண்டேன். நான் இன்று முதல் நன்றாகப் படித்து என் பள்ளியில் முதல் மாணவராக வரவேண்டும் என உறுதிகொண்டேன். அன்று முதல் நான் நட்ராகப் படித்து, என் நேரத்தை வீணாக்காமல் நடந்துகொண்டேன். நான் உறுதி பூண்டதுபோலவே என் பள்ளியில் நான் தான் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவனாகத் திகழ்ந்தேன்!  என் அப்பாவுக்குப் பெருமையாக இருந்தது! என் அப்பாவின் அறிவுரைப்படி நான் நடந்துகொண்டதால் நான் முன் கூறிய பழமொழிக்கேற்ப, இன்று நான் ஒரு சிறந்த மருத்துவராக இருக்கிறேன்.  

The portions in italics and in a different colour are the areas that I have had to meddle and correct the phrasing or the content! hope these help my P6 and all other P6 pupils who have their upcoming PSLE exams!!

Love,
Raihana Aasiriyar