Map of Tamilnadu

Saturday, July 2, 2011

தொடக்கநிலை 6 கதை அல்லது கட்டுரை.

" இதுவரையில் என் குடும்பம் நேரில் கண்டு ரசித்திராத பல மிருகங்களைக் கண்டதோடு, ஒரு நாள் முழுவதும் என் நெருங்கிய பள்ளி
* தோழியுடனும் / தோழனுடனும்    *அவள் / அவன் குடும்பத்துடனும் பொழுதைக் களித்தது எனக்கு இரட்டிப்புச் சந்தொஷத்ததைக் கொடுத்திருந்தது என்னால் மறக்க முடியாத நாளாக அன்று மாறியிருந்தது! உண்மையில் நாங்கள் தேர்வு எழுதி முடித்தபின் எங்களுக்குக் கிடைத்த 
மிக அரிய பரிசு என்றே நினைத்து,
சோர்வுற்று இருந்தாலும் மிக மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வீடு திரும்பினோம்! "
* தேவையான சொல்லைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவ மணிகளே - இது ஒரு கட்டுரை / கதையின் முடிவாகும். இச் சொற்களை நீங்கள் சேர்க்காமல் 100 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கதை அல்லது கட்டுரையை எழுதிக் கொடுக்க வேண்டும்!
பாடம் செய்ய இதோ சில முக்கிய உதவிக் கட்டளைகள். :)
1  நீங்கள் எங்கே சென்றிருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு முக்கிய தடயம் முதல் வரியிலேயே உள்ளது.
2 உங்களுடன் உங்கள் உயிர் தோழன் அல்லது உயிர் தோழி மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினரும் வந்திருக்கின்றனர்.
3 "இரட்டிப்பு" என்றால் Double  என்று பொருள்.

Friday, July 1, 2011

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான செய்யுள் பழமொழிகள்

தொடக்கநிலை மூன்று

1 அறம் செய விரும்பு
2 ஆறுவது சினம்
3 இயல்வது கரவேல்
4 ஈவது விலக்கேல்
5 உடையது விளம்பேல்
6 ஊக்கமது கைவிடேல்
7 எண் எழுத்து இகழேல்
8 ஏற்பது இகழ்ச்சி
9 ஐயம் இட்டு உண்
10 ஒப்புரவு ஒழுகு
11 ஓதுவது ஒழியேல்
12 ஔவியம் பேசேல்
13 தந்தை தாய் பேண்
14 நன்றி மறவேல்
15 வைகறைத் துயில் எழு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடக்கநிலை நான்கு 
கொன்றை வேந்தன் 
1 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 
2 என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும் 
3 கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
4 தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
5 நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும் 
வெற்றி வேற்கை 
 1 அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் 
 2 உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் 
 3 மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் 
 4 சுடினும் செம்பொன் தண்ணொளி கெடாது 
 5 பெருமையும் சிறுமையும் தான் தர வருமே. 
பழமொழிகள்
1   அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
2   அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
3   அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்
4   ஆத்திரக்காரனுக்கு புட்டி மட்டு
5   ஆழம் அறியாமல் காலை இடாதே
6   ஆனைக்கும் அடி சறுக்கும்
7   இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை
8   எறும்பு ஊரக் கல்லும் தேயும்
9   ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
10 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடக்கநிலை ஐந்து
பழமொழிகள்
1 அடக்கம் ஆயிரம் பொன் தரும்
2 அடாது செய்பவர் படாது படுவர்
3 அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்
4 இளமையில் கல்வி சிலையில் எழுத்து
5 உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டை
6 உப்பிட்டவரை உள்ளளவும் நினை
7 எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்
8 ஒருவர் பொறை இருவர் நட்பு
9 கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு
10 காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
11சிறு துரும்பும் பல் குட்ட உதவும்
12தன் கையே தனக்கு உதவி
13நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும்
14நிழலின் அருமை வெயிலில் தெரியும்
15நிறை குடம் நீர் தளும்பாது
திருக்குறள்
1 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
2 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்
3 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்கு
4 கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
5 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது    
6 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம்  எல்லாம் மழை
7 அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
8 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
9 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
10 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 
தொடக்கநில ஆறு
பழமொழிகள்
1ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
2கெடுவான் கேடு நினைப்பான்
3சிறு துளி பேரு வெள்ளம் 
4கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும் 
5நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
6பகுத்தறியாமல் துணியாதே 
7பதறாத காரியம் சிதறாது 
8புத்திமான் பலவான் ஆவான் 
9பொறுத்தார் பூமி ஆழ்வார் 
10மனம் உண்டானால் வலி உண்டாகும் 
11மின்னுவது எல்லாம் பொன்னல்ல 
12முதல் கோணல் முற்றும் கோணல்
13முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 
14வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் 
15 வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும் 
 
 
திருக்குறள் 
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல் 
 
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே 
பசும்புல் தலைகாண்பு அரிது 
 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு 
 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு 
 
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு 
 
எண்ணென்ப  ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு 
 
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு 
 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல் 
 
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும் 

கட்டுரை தொ நி 6 - ரியாசத் அலி :) Good Job!

இருட்டு கலைந்திட, விண்மீன்கள் நழுவிவிட, வானம் கலந்கலாகிவிட, விடியலின் அறிவிப்பாக பறவைகள் கூவிட, நான் தூக்கம் களைந்து துயில் எழுந்தேன்.  அந்த அழகிய நாள் அன்று, விடுமுறையை  என் சிநேகிதர்களுடன் செலவழிக்க பாசிரீஸ் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம்.
என் காலைக்கங்களை முடித்துவிட்டு நீச்சல் ஆடையையும் நொறுக்குத் தீனியையும் எடுத்துக்கொண்டு என் நண்பர்களைச் சந்திக்க பாசிரீஸ் பேரு விரைவு ரயில் நிலையத்திற்கு பேருந்தில் உற்சாகத்தோடு சென்றேன். அங்கே உயிர் தோழர்களைச் சந்தித்த பின்னர் கடற்கரைக்கு நடந்துச் சென்றோம்.
நடந்து கொண்டிருந்தபொழுது, சட்டென்று வானம் திடீர் மழைக்கு ஆயுத்தமாய் காணப்பட்டது. சின்ன சின்ன மழைத்துளிகள் விழத் துவங்கின. தூறல் மெல்ல மெல்ல தைரியமடைந்து மழையாகிக்கொண்டிருக்க, " பட்ட் பட்ட்"  என்று ஆங்காங்கே விரிய, நாங்கள் அடுத்த வினாடியே மலையிலிருந்து தப்பிக்க ஒரு சமூக மன்றத்தின் முதல் மாடியில் அமர்ந்தோம்.
நேரமோ ஓடிக்கொண்டிருந்தே தான் இருந்தது! ஆனால் மழை விட அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. நாங்கள் செய்வதறியாமல் சோகக் கடலில் மூழ்கி இருந்தோம். எதிர்பாராமல் வந்த மழை விடாமல் தொடர்ந்து பெய்து கடற்கரைக்கு எங்களை செல்ல விடாமல் தொடர்ந்தது. மழையை எதிர்பாராத என் நண்பர்களின் அழகிய வதனம் பூப்போல் வாடியது. எங்கள் முகத்தில் சோகம் நிழலாடியது. நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்க ஆசையுடன் வந்த எங்களுக்கு சோகம் மட்டுமே மிஞ்சியது.
அப்போது எனக்கு ஓர் அற்புதமான யோசனை ஒன்று தோன்றியது. கடற்கரைக்கு சென்று பூப்பந்து விளையாடுவதற்குப் பதிலாக நாங்கள் அந்தச் சமூக மன்றத்திலேயே விளையாடலாம்
என்றுதிட்டமிட்டோம்! அவ்வாறே பூப்பந்து விளையாடிவிட்டு
விரைவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக
வீடு திரும்பினோம்.